கிளிநொச்சி வீதியில் திடீரென உயிரிழந்த பிரதேச சபை ஊழியர்
கிளிநொச்சியில் பிரதேச சபை ஊழியர் ஒருவர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மதிய உணவிற்காக செல்வதாக புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் பகுதியைச் சேர்ந்த, 47 வயது மதிக்கத் தக்க விஜயகுமார் என்ற வெளிக்களத் தொழிலாளியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் கிளிநொச்சி நகரில் திருநகர் வீதியில் அரச நில அளவைத் திணைக்களத்துக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் சுகாதாரத்தரப்பினர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சாதாரணமாக பணிக்கு வந்தவர் திடீரென உயிரிழந்துள்ளமை பிரதேச மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.