விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பொலிஸ் அதிகாரி! மற்றுமொருவர் வைத்தியசாலை
கொழும்பில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு அதிகாரி காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் அவிசாவளை, புவாக் பிட்டிய தும்மோதர இலுக் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புவக்பிட்டிய, துன்மோதர அவிசாவளை வீதியில் சீமெந்து லொறியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த சார்ஜன்ட், கான்ஸ்டபிளுடன் சென்று கொண்டிருந்த போது, சீமெந்து லொறி தம்மை நோக்கி நெருங்கி வருவதைக் கண்டு உடனடியாக, மோட்டார் சைக்கிளை வீதியின் ஓரத்தில் செலுத்தியபோது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விபத்தில் சீமெந்து லொறியும் மோட்டார் சைக்கிளும் பாலத்தின் கீழ் விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.