இலங்கை வானிலையின் அடுத்த 24 மணித்தியாலங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
நாட்டில் உள்ள மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று 3.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த பகுதிகளில் சில இடங்களுக்கு மி.மீ. 50க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வடமேற்கு மாகாணத்தில் பல மழைக்காலங்கள் ஏற்படக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்கள் உடனடியாக காணி அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.