கிளிநொச்சி கனகாம்பிகைக் குளத்தின் அவல நிலை... காலப்போக்கில் காணாமல் போகப் போகிறதா?
கிளிநொச்சி மண்ணின் இதயப் பகுதியில் A9 வீதிக்கு அருகில் யாழ்.பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய பீடங்கள் அமைத்துள்ள அறிவியல் நகருக்கு மிக அருகில் உள்ள கனகாம்பிகைக் குளத்தினுள் பாரிய இயந்திரங்களுடன் மண் இட்டு நிரப்பும் நிலவேலைகள் நடப்பதாகவும் அது குளத்தை ஆக்கிரமிக்கவல்ல செயற்பாடாக இருக்கலாம் என்ற தொனியில் வடமாகாண நீர்பாசன திணைக்களத்தின் கிளிநொச்சி பிரிவில் இருந்து கிளிநொச்சி பிரதேச செயலருக்கு அனுப்பப்பட்ட கடிதம் பொதுவெளியில் கிடைத்தது.
இவ்வாறான சிறு சிறு ஆக்கிரமிப்புகளை கைகட்டி வேடிக்கை பார்த்துத்தான் யாழ்க் குடாநாட்டில் மட்டும் 500 க்கு மேற்பட்ட குளங்கள் இன்று காணாமல் போய்விட்டன அல்லது கைவிடப்பட்டு விட்டன.
அரச நிர்வாக கட்டமைப்புகள், சமுக நலன்விரும்பிகள், பிரதேச அமைப்புகள், இளைஞர்கள் குறிப்பாக யாழ்ப்பல்கலைக்கழக விவசாய மற்றும் பொறியியல் பீடங்கள் தங்கள் சூழலில் உள்ள இவ்வாறான விடையங்கள் மீது அக்கறை எடுத்து செயற்படுவது அத்திய அவசியமானது என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
இந்த பதிவை முகநூலில் திருநாவுக்கரசு தயந்தன் என்பவர் ஈட்டுள்ளார்.

