வவுனியா வைத்தியசாலையில் பொலிஸ் சர்ஜென்ட் செயலுக்கு குவியும் பாராட்டு!
வவுனியா வைத்தியசாலையில் கீழே விழுந்திருந்த ஒன்றரை தங்க சங்கிலியை எடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (24) வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா வைத்தியசாலையின் பொலிஸ் காவல் மையத்தில் பணிப்புரிந்து கொண்டிருந்த பொலிஸ் சர்ஜென்ட் (46674) திலகரத்ன என்ற அதிகாரி வைத்தியசாலையை சுற்றிப் பார்வையில் ஈடுபட்டிருந்த போது தரையில் விழுந்திருந்த ஒன்றரை பவுண் தங்கச் சங்கிலி கண்டெடுத்தார்.
பின்னர் அந்த அதிகாரி இது குறித்து செவிலியர் குழுவினருக்கும் அறிவித்ததுடன், அந்த தங்கச் சங்கிலியை பொலிஸ் காவல் மையத்தில் பாதுகாத்து வைத்திருந்தார்.
இந்நிலையில், ஒரு பல்கலைக்கழக மாணவி தன் தாயாருடன் கண்ணீர் மல்க தன்னுடைய தங்கச் சங்கிலி விழுந்து விட்டதாக தேடி வந்துள்ளார்.
இதனையடுத்து , வைத்தியசாலை பொலிஸ் காவல் மைய அதிகாரிகள் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர் அந்த சங்கிலியை மீண்டும் அவருக்குக் கையளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.