பெண் என்றும் பாராது யாழில் ஊடகவியலாளர்கள் மீது பொலீசார் மேற்கொண்ட அராஜகம்
யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது தொடர்பிலான பரபரப்பு காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள தியாகி திலீபனின் நினைவு தூபி முன்பாக ஈகைச் சுடர் ஏற்றிதற்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்போது சம்பவத்தை காணொளி எடுத்துக்கொண்டிருந்த பெண் ஊடகவியலாளர்களையும் பொலிஸார் இழுத்துச்சென்று வாகனத்தில் ஏறியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வருவதுடன் பெண் என்றும் பாராது யுவதிகளை இவ்வாறு பொலிஸார் இழுத்து சென்று ஏறியமை தொடர்பில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.