ஆடை விற்பனை நிலையத்தில் பெண்ணின் பணப்பையை திருடிய பொலிஸ் அதிகாரி!
கண்டியில் பெண் ஒருவரின் பணப்பையைத் திருடியதாக குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்டி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணப்பையின் உரிமையாளர் கடந்த மாதம் 9 ஆம் திகதி பணப்பையைக் காணவில்லை எனக் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ் விடயம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட ஆடை விற்பனை நிலையத்தில் சிசிரிவி கமராவை கண்காணித்ததில் பெண்ணொருவரின் கைப்பையைத் திறந்து பணப்பையைத் திருடிச் சென்றது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கைதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பொக்காவல பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.