கப்பம் கோரி கொலை அச்சுறுத்தல் விடுத்தவர் கைது
5 கோடி ரூபா கப்பம் கோரி கொலை அச்சுறுத்தல் வழங்கியதாக கருதப்படும் சந்தேக நபர் ஒருவர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று புதன்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் குடாபுத்கமுவ, அங்கொட பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவராவார்.
இவருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் இடையில் உள்ள காணி தகறாறு காரணமாக சந்தேக நபர் வெளிநாட்டில் உள்ள தனது உறவினர் மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் மிரிஹான பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.