3 நாட்களுக்கு மட்டுமே நாடாளுமன்ற அமர்வு!
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையில் விசேட கூட்டமொன்று இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் , ஜூலை மாதம் முதல் வார நாடாளுமன்ற அமர்வுகளை 4, 5, 6 ஆகிய திகதிகளில் மட்டும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்திலே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 4ஆம் திகதி திங்கட்கிழமை வாய்மூல கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த பிரேரணையின் பிரகாரம் 5 ஆம் திகதி ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.