புதிய கல்வி சீர்திருத்தங்களால் ஆசிரியர்களுக்கு பாதிப்பும் ஏற்படாது
புதிய கல்வி சீர்திருத்தங்களால் ஆசிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த பட்டறையில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியதன் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கல்வி அதிகாரிகளிடம் கூட சரியான புரிதல் இல்லை என கல்வித் தொழிற்துறையினர் சங்கத்தின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்களின் பின்னர் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.