கொழும்பு ஜோசப் வாஸ் மன்றத்தின் திறந்த வெளி பெரிய சிலுவை பாதை (நேரலை)
இயேசு கிறித்து தம் மண்ணக வாழ்வின் இறுதி நாட்களில் துன்பங்களை அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வுகளை நினைவு கூறும் முகமாக கொழும்பு ஜோசப் வாஸ் மன்றத்தால் பெரிய சிலுவை பாதை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்வானது 28ஆவது வருடமாக ஒழுங்கு செய்யும் திறந்த வெளி பெரிய சிலுவை பாதை ஆகும்.
2024.02.18ஆம் திகதி ஞாயிற்றுகிழமை பிற்பகல் 3.15 மணிக்கு, கொழும்பு புதிய செட்டி வீதியில் அமைந்துள்ள புனித வியாகுல அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி புனித வேளாங்கண்ணி ஆலயம், புனித அந்தோனியார் ஆலயம் வழியாக கொட்டாஞ்சேனை புனித லூசியஸ் பேராலயத்தை வந்தடையவுள்ளது.
புனித லூசியஸ் பேராலயத்தின் வளாகத்தில் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மேதகு எண்டன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.