ஹாலிவுட்டுக்கே டப் கொடுக்கும் நித்தியானந்தா!
பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டுவரும் சாமியார் நித்தியானந்தா கைலாஸா நாட்டில் இருந்து நேரடியாக மக்களுக்கு ஆசி வழங்குகிறேன் என கூறி தினமும் லைவ்வில் வந்து பேசுகிறார்.
தம்லைமறவான நித்தியானந்தா சிறுமி கடத்தல், ஆட்கடத்தல், கொலை வழக்கு என்று பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நித்தியானந்தா, தனக்கென தனி நாட்டினை உருவாக்கி இருப்பதாகவும், அதற்கு கைலாஸா என்று பெயரிட்டு இருப்பதாகவும், இந்த நாடு முழுக்க முழுக்க இந்து கட்டமைப்புகளால் உருக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இவரை கைது செய்ய நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சர்வதேச அளவிலான இன்டர்போல் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளது. எனினும் இன்று வரை நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? உண்மையில் கைலாஸா என்ற நாடு உள்ளதா? அவருடன் சென்ற சீடர்கள் மற்றும் பெண் பக்தர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் தனக்கென தனி கணக்கை தொடங்கிய நித்யானந்தா, தனக்கு தானே கைலாஸாவின் அதிபராக பொறுப்பேற்று, நாட்டிற்கான வர்த்தக நாணயத்தையும் வெளியிட்டார்.
அத்துடன் தினமும் அவர் சமூக வலைத்தளம் வாயிலாக ஆதரவாளர்களிடையே உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில், இன்று பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில்,
" என் வார்த்தையை நான் உங்களுக்குக் கொடுக்கும்போது, நான் உங்களுக்கு சக்தியைக் கொடுக்கிறேன், தத்தாஸ்து!., கடைசி இந்து கொல்லப்பட்டு ஒழிக்கப்படும் வரை இந்த இந்து எதிர்ப்பு ஊடகங்கள் நிறுத்தப் போவதில்லை.
கடைசி இந்துவை அவர்கள் கொன்ற பிறகு, கதையும் இருக்கும், அவர் கொல்லப்படுவதற்கு பொறுப்பாக ஊடகம் இருக்கும். அவர் சமூக விரோத மற்றும் மனிதநேயமற்றவர், அதனால் அவர் கொல்லப்பட்டார் என்று கூறும்.
இந்துக்களே விழித்துக்கொள்! வேலை, திருமணம், வீடு மற்றும் நல்ல சம்பளம் பெறுவது வாழ்க்கை அல்ல. இந்து இளைஞர்கள் மூளைச்சலவை அடைந்து வருகிறார்கள், சிறிய சிறிய "வெற்றி" தான் வாழ்க்கை இந்து கலாச்சாரத்தை உயிருடன் வைத்திருக்க சாது வாழ்க்கையை எடுக்கும் சில தைரியசாலிகள் பயப்படுகிறார்கள், சட்டத்தை எதிர்கொள்கிறார்கள் " என தெரிவித்துள்ளார்.
இதையெல்லாம் பார்க்கும் நெட்டிசன்களோ நீ கொடுக்கும் பில்டப் ஓகே., போட்டோ எடிட்டிங் விஷயத்தில் ஹாலிவுட் எடிட்டர்களுக்கே போட்டி போடலாம் என நித்தியனந்தாவை கலாய்த்து வருகின்றனர்.