யாழில் புத்தாண்டில் இடம்பெற்ற விபரீதம்!
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் புத்தாண்டு தினமான நேற்றையதினம் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.
[5M6BCA
வைத்தியசாலையில் அனுமதி
கல்லுண்டாய் பகுதியில் உள்ள வைரவர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் நபரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
நேற்றைய தினம் இரவு முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஆறுக்கும் மேற்பட்டவர்கள் சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபரை அயலவர்கள் மீட்டு , நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.