எரிபொருள் பயன்பாடு தொடர்பில் புதிய அரச சுற்று நிருபம்
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட சுற்று நிருபமொன்றை அனுப்பி அரச வாகனங்களை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், கொழும்பில் நடைபெறவுள்ள விசேட மாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு கொழும்பு செல்வதற்கு அரசாங்க வாகனங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துமாறும் அமைச்சின் செயலாளர் நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அரசாங்க அதிகாரிகளை அரசாங்க வாகனங்களுக்கு அழைப்பதை விடுத்து கொழும்பில் கூட்டங்களை ஜூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க வட்டாரங்களின்படி, இந்த நடவடிக்கைகள் அரசாங்க நிறுவனங்களுக்குள் எரிபொருள் நுகர்வு மற்றும் எரிபொருள் செலவினங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.