நயன்தாராவுக்கு மீண்டும் இரட்டை குழந்தைகளா? வைரலாகும் புகைப்புடம்
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. வயது 40ஐ நெருங்கிவிட்டாலும் இன்றளவும் நம்பர் ஒன் நாயகியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பிசியான நாயகியாக நயன்தாரா உள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் தன்னுடைய நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை , நயன்தாரா கரம்பிடித்தார். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகிவிட்டதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் நயன்தாரா.
ஏஐ தொழில்நுட்ப வீடியோ
அது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. பின்னர் தான் அவர் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த தகவல் தெரியவந்தது.
தன்னுடைய இரட்டை ஆண் குழந்தைகளுக்கு உயிர், உலக் என பெயரிட்ட நயன்தாரா, அவர்கள் மீது அதீத அன்பு வைத்திருப்பதை பல மேடைகளில் கூறி இருக்கிறார்.
தற்போது நயன்தாராவின் மகன்மளுக்கு இரண்டு வயது ஆகிற நிலையில் கணவர் விக்னேஷ் சிவன், ஒரு வீடியோவை பதிவிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மறுபடியும் இரட்டைக் குழந்தைகளா என ஷாக்காயுள்ளனர். ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட அந்த வீடியோவில் உள்ள இரட்டை பெண் குழந்தைகளும் நயனின் முக ஜாடையுடன் செம க்யூட்டாக இருக்கின்றனர்.
இதை இன்ஸ்டா ஸ்டோரியில் ஷேர் செய்துள்ள விக்னேஷ் சிவன், சில நேரங்களில் ஏஐ-யும் ரொம்ப க்யூட்டாக உள்ளது என குறிப்பிட்டு அந்த வீடியோவுக்கு ஹார்ட்டை பறக்கவிட்டுள்ளார்.