மாயமான சிறுமிகள் கண்டுபிடிப்பு
அம்பாறை – இங்கினியாகலையில் காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமிகள், மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
16 வயதான பி.ஜி.அஷானி வஷ்மிகா மற்றும் எப்.ஆர். பவீஷா நெத்மினி ஆகிய இரு மாணவிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடு
இங்கினியாகல பொல்வத்த மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் இருவரௌம் நெருங்கிய நண்பிகள். கடந்த 15ம் திகதி பவீஷா பாடசாலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு ஆஷானியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அஷானியின் தந்தை கொழும்பில் பணிபுரிகிறார், அவர் பாட்டி வீட்டில் வாழ்ந்து வருகின்றார். சிறு வயதிலேயே அம்மா அவரை கைவிட்டு சென்றுள்ளார். அஷானி, மேலதிக வகுப்புக்கு செல்வதாக பாட்டியிடம் கூறி வீட்டிற்கு பவீஷாவுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
சிறுமிகள் திரும்பி வராததையடுத்து பவீஷாவின் பெற்றோரும் அஷானியின் பாட்டியும் இங்கினியாகல பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இந் நிலையில், இன்று மீகஹாவத்தையில் உள்ள வீடொன்றில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.