இரு இளம் தமிழ் சாரதிகளை மதுபோதையில் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய இஸ்லாமிய நபர்கள்!
அம்பாறை - பொத்துவில் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்புக்கு செல்லும் தனியார் பேருந்து சாரதியாகவும், நடத்துனராகவும் இரு தமிழ் இளைஞர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
குறித்த இரு தமிழ் இளைஞர்களை இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த சிலர் மதுபோதையில் அவ்விடத்திற்கு வருகைதந்து பேரூந்து என்ன நேரத்துக்கு புறப்படுமென வினவி இரு தமிழ் சாரதிகள் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தும் காணொளியொன்று வைரலாக பரவி வருகின்றது.
இதெவேளை, குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் பலத்த காயங்களுடன் திருக்கோவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மற்றவர் பொத்துவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று (19-04-2024) இடம்பெற்றுள்ளது.
பொத்துவில் பொலிஸார் இப்பிரச்சினை தொடர்பாக எவரையும் கைது செய்யவில்லை என்பதை மிகுந்த மனவேதனையுடன் பொத்துவில் தமிழ் மக்கள் அறியத்தருகின்றனர்.