விசிலுக்கு ஓட்டு போட சொன்ன பாட்டி ; தேர்தல் அதிகாரி செய்த சம்பவம் ; வலுக்கும் கண்டனம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக இடம்பெற்று முடிந்த நிலையில்சமயபுரத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது, ஒரு வயதான பாட்டியின் வாக்கு தவறாக மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் சின்னத்துக்கு ஆதரவாகப் பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், தேர்தல் நடைமுறையில் நேர்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

விசில் சின்னத்துக்கு வாக்கு..
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள சமயபுரம் பகுதியின் 15வது வார்டு, 5ஆம் இலக்க வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த ஒரு மூதாட்டி, தனக்கு விசில் சின்னத்துக்கு வாக்கு போட வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
விசில் சின்னம் அந்த வாக்குச்சாவடியில் 5ஆம் வரிசையில் இருந்ததுள்ளதாகவும் ஆனால், தேர்தல் அதிகாரி அல்லது உதவியாளர், முதலாவது பட்டனை அழுத்தி வாக்கைப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
முதலாவது இடத்தில் உதயசூரியன் சின்னம் (திமுகவின் சின்னம்) இருந்துள்ளது. இந்தச் சம்பவம் வீடியோவாகப் பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலானது.
வீடியோவில் பாட்டி விசில் சின்னத்துக்கு ஓட்டு போடச் சொல்வது தெளிவாகக் கேட்கிறது.
ஆனால், அதிகாரி முதலாவது பட்டனை அழுத்தியதால் வாக்கு உதயசூரியன் சின்னத்துக்கு சென்றுவிட்டதாக வாக்குவாதம் எழுந்தது. இது தேர்தல் அதிகாரியின் அலட்சியம் அல்லது தவறான செயலாகக் கருதப்பட்டு, அவர்மீது முறைபாடு முன்வைக்கப்பட்டுள்ளது.