குவைத்தில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு வெளியான அவசர தகவல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலைமையைக் கருத்திற் கொண்டு, குவைத்தில் வசிக்கும் அனைத்து இலங்கைப் பிரஜைகளும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அவசர அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
குவைத் உள்துறை அமைச்சகம் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை ஆகியவை அவ்வப்போது வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகளைத் துல்லியமாகப் பின்பற்றி நடக்குமாறு தூதரகம் கோரியுள்ளது.

முக்கிய அறிவுறுத்தல்கள்
இலங்கையர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய அறிவுறுத்தல்களாகத் தூதரகம் பின்வருவனவற்றை முன்வைத்துள்ளது: பயணக் கட்டுப்பாடு: அவசியமற்ற வெளிப் பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தொடர்பு சாதனங்கள்: அவசரத் தேவைகளுக்காகத் தங்களது கைப்பேசிகளில் (Mobile Phones) எப்போதும் போதிய மின்கலச் சேமிப்பை (Charge) வைத்திருப்பது அவசியமாகும்.
வதந்திகளைத் தவிர்த்தல்: சமூக ஊடகங்கள் வழியாகப் பரப்பப்படும் உறுதிப்படுத்தப்படாத மற்றும் உத்தியோகபூர்வமற்ற தகவல்களைப் பகிர வேண்டாம் எனத் தூதரகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏதேனும் அவசர நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அல்லது கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தைக் கீழ்க்கண்ட எண்கள் ஊடாகத் தொடர்பு கொள்ள முடியும்.
குவைத் தூதரகத் தொடர்புகள்: +965 65845646 (வாட்ஸ்அப் வசதி உடன்) +965 66503544 (வாட்ஸ்அப் வசதி உடன்) +965 25354611 (நேரடி அழைப்புகள் மட்டும்)
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE):Beaches & Islands +94 71 980 2822 (வாட்ஸ்அப் வசதி உடன்) 1989 (துரித அழைப்பிலக்கம்)