வவுனியாவில் இரவுவேளை வேகமாக வந்த மோட்டார் சைக்கிளால் நேர்ந்த அசம்பாவிதம்!
வவுனியா குருமன்காடு பகுதியில் சற்றுமுன்னர் பாதையினை நடக்க முற்சித்த வயோதிபரை வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிபரை காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
இச்சம்பவம் இன்றைய தினம் (30.11.2022) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது,
மோட்டார் சைக்கிளில் குருமன்காடு பகுதியிலிருந்து காளிகோவில் வீதிக்கு மாறமுற்பட்ட வயோதிபர் மீது வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியுடாக சென்ற அதிக சிசி உடைய இரு மோட்டார் சைக்கிள்கள் குறித்த வயோதிபரின் மோட்டார் சைக்கிலை மோதியுள்ளது.
இந்த விபத்தில் வயோதிபர் காயங்களுக்குள்ளாகியிருந்தார்.
குறித்த இரு மோட்டார் சைக்கிலும் அதிக வேகத்துடன் பயணித்தாகவும் அவர்களின் வேகமாக இவ் விபத்துக்கு காரணம் என தெரிவித்து விபத்து இடம்பெற்ற இடத்தில் ஒன்று கூடிய பொதுமக்களினால் பதட்ட நிலமை காணப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்து வவுனியா போக்குவரத்து பொலிஸார் இரு மோட்டார் சைக்கிலையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.