5 வயது மகளை கிணற்றில் தள்ளிவிட்டு தவறான முடிவெடுத்த இளம் பெண்! வெளியான அதிர்ச்சி காரணம்
இந்தியாவில் குடும்ப பெண்ணொருவர் தனது 5 வயது பெண் குழந்தையை கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மகாராஷ்டிரா மாநிலத்தில் சேர்ந்த 26 வயதான மாலேகானை என்ற பெண்ணுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் தனது மகனையும், மகளையும் பாடசாலையில் சேர்க்க பாக்யஸ்ரீ விரும்பியுள்ளார். ஆனால், அத்தகைய பாடசாலை கட்டணம் இவர்களின் குடும்பத்தின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்துள்ளது.
இதன் காரணமாக குறித்த பெண் அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.
இவ்வாறான நிலையில் கடந்த 18-06-2024 ஆம் திகதி மாலை 5:30 மணியளவில், தனது மகளுடன் மற்றொரு விவசாயிக்கு சொந்தமான கிணற்றுக்கு சென்ற பாக்யஸ்ரீ, அங்கிருந்து தனது கணவர் வெங்கட் ஹல்சேவுக்கு வீடியோ கால் செய்து, மகள் சமிக்சாவின் முகத்தை கடைசியாக பார்க்குமாறு கூறிவிட்டு, சிறுமியை கிணற்றில் தள்ளி, அவரும் குதித்துள்ளார்.
தகவலறிந்த ஆரத் ஷஹாஜானி பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதி மக்கள் உதவியுடன் பாக்யஸ்ரீ, சமிக்சா ஆகிய இருவரின் சடலங்களையும் மீட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.