பிள்ளையின் கண் முன் தாய் கழுத்தறுத்து கொலை
பிள்ளையின் கண் முன் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
இச் சம்பவம் பொல்பித்திகம தல்பத்வெவ பிரதேசத்தில் நேற்று காலை 07.15 மணியளவில்இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பம்
32 வயதான ஜமினி தினுஷிகா மதுஷானி தென்னகோன் என்ற பெண்னே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் நேற்று காலை தல்பத்வெவ மகா வித்தியாலயத்திற்கு தனது மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற வேளையில் கணவனால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
வீதியில் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய போது, கணவர் கூரிய ஆயுதத்தால் பெண்ணின் முகம், கழுத்து மற்றும் தலை ஆகிய பகுதிகளில் தாக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் அவரை மருத்துவமனையில் சேர்க்க முயன்றுள்ளனர்.
எனினும் அதிக இரத்தம் வெளியேறியதால் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.