முள்ளிவாய்க்கால் மண்ணில் தென்புலத்தார் வழிபாடு; கண்ணீரில் உறவுகள்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் தாயகத்தில் நினைவேந்தப்படுகின்றது.
இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளுக்காக முள்ளிவாய்க்கால் கப்பல் துறை கடற்கரையில் இறந்தவர்களுக்காக தென்புலத்தார் வழிபாடு இடபெற்றது.

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று திங்கட்கிழமை காலை முதல், உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, இன்று காலை ஆறு மணி முதல் 09 மணி வரை, முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில், இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் மற்றும் மதக் கிரியைகள் நடத்தப்படுகின்றன.
பிதிர்கடன்களை ஆற்றும் உறவுகள்
இதன்போது உயிரிழந்தவர்களுக்கு , தர்ப்பணம் முதலானவை மக்களிடமிருந்து பொருட்செலவோ பணமோ பெறாமல் முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது.
இதன்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்தவர்களின் உறவுகள் பிதிர்கடன்களை கண்ணீருடன் செலுத்தி வருகின்றனர்.
2009 ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட அநீதிக்கு எதிராக எதிர்ப்பைப் பதிவு செய்யவும், உலகிடம் நீதியைக் கோரவும் இந்த நினைவேந்தல் மிக முக்கியமானது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அரசியலைக் கடந்து தமிழ்த்தேசமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும், முள்ளிவாய்க்கால் மண்ணில் அணி திரண்டு உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துமாறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
சிங்கள அரசால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழின படுகொலை சம்பவம் ஈழதமிழர்களின் வரலாற்றில் மிகவும் ரத்த கறைபடிந்த பக்கமாகும்.


