இலங்கையில் நீடிக்கும் அபாயம்: 2 ஆவது நாளாக 150க்கும் அதிகமான மரணங்கள் பதிவு!
இலங்கையில் நேற்று வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 155 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது.
30 வயதிற்கு கீழ் 3 பெண்களும் 30 முதல் 59 வயதிற்கிடைப்பட்டோரில் 27 ஆண்களும் 17 பெண்களுமாக 41 பேரும், 60 வயதும் அதற்கு மேற்பட்டோரில் 58 ஆண்களும் 53 பெண்களுமாக 111 பேர் இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 347,500 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 304, 628 ஆக அதிகரித்துள்ளது.