செஞ்சோலை சிறுவர் இல்ல படுகொலை ; படையினரின் தடையை மீறி சிவாஜிலிங்கம் அஞ்சலி
செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு , அதி உயிர்நீத்தவர்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தின் முன்பாக இன்று காலை அவர் சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்.
குறித்த அஞ்சலிக்கு பொலிஸார், இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்திய போதிலும் , அவற்றினையும் மீறி படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியிலிருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது விமான படையினர் மேற்கொண்ட விமான குண்டு வீச்சில் 54 மாணவிகளும் 7 பணியாளர்களுமாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
மேலும் அந்த கொடூர தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட மாணவிகளும் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


