மொட்டு கட்சி உறுப்பினர்களை அதிரடியாக கைது செய்த பொலிஸ்!
மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட இரண்டு மொட்டு கட்சியின் உறுப்பினர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (13-12-2021) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஒன்றிணைந்து மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நடைபெற்றது.
இந்த அமர்வின் போது பிரதேச சபையின் உப தவிசாளரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் சபையில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அமைதியின்மை ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட மோதலில் பிரதேச சபையின் உப தவிசாளர் பெரியசாமி பிரதீபன், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் எஸ்.ஏ.திஸாநாயக்க ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மஸ்கெலிய பொலிஸாரால் மஸ்கெலியா பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர் எஸ்.ஏ.திஸாநாயக்க, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் பெருமாள் ஆனந்தராஜ் ஆகியோர் நேற்றிரவு (15-12-2021) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மோதலில் படுகாயமடைந்த உப தவிசாளர் பெரியசாமி பிரதீபன் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.