செவ்வாய் பெயர்ச்சி ; செல்வத்தை அள்ளி குவிக்க போகும் ராசிகாரர்கள் இவர்கள் தான்
செப்டம்பர் 13 ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசிக்கு பெயர்ச்சி பெறுகிறது. இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சோதனைகளை கொடுத்தாலும், சிலருக்கு பெரும் அதிர்ஷ்டத்தை அளிக்கிறது. குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் செல்வ வளம் பெருகப்போகிறது.
இடம், வீடு, வாகனம் போன்ற சொத்து சம்பந்தமான ஆசைகள் நிறைவேறும். சின்ன சின்ன முயற்சிகளும் பெரிய பலன்களாக மாறும். கீழே குறிப்பிட்டுள்ள மூன்று ராசிக்காரர்களுக்கு செல்வ வளம் பெருகும்.
நன்மைகள் கிடைக்கும் ராசிகள்
ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மிகச் சிறந்த பலன்களை தருகிறது. நீண்ட நாட்களாக சொத்து சம்பந்தமாக இருந்த பிரச்சினைகள் தீரும். நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வீட்டில் புதுப்பிப்பு வேலைகள் அல்லது புதிய வீடு கட்டும் யோசனைகள் வலுப்பெறும். தொழில் தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டு, கையிருப்பு பணம் அதிகரிக்கும். முதலீட்டில் கவனமாக இருந்தாலும், எதிர்பாராத லாபம் குவியும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்
சிம்மம் : சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகுந்த செல்வ வளத்தையும், சமூகத்தில் மரியாதையையும் தருகிறது. வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வீடு வாங்கும் கனவு நனவாகும். வாகன வசதி கிடைக்கும். வேலைக்கு தொடர்பான உயர்வு, பதவி மாற்றம் போன்றவை உங்களுக்கு நன்மை தரும். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும். அண்ணன், சகோதரர்கள் வழியாக நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் உறவுகள் மேம்பட்டு மகிழ்ச்சி பெருகும்.
தனுசு : தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மிகவும் பலனளிக்கிறது. நீண்ட நாள் கனவான சொத்து சேர்க்கை சாத்தியமாகும். கடனில் இருந்தவர்கள் கடனை அடைத்து சுதந்திரம் பெறுவீர்கள். வெளிநாட்டில் இருந்து பண வரவு அதிகரிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைத்து, வருமானம் அதிகரிக்கும். முதலீட்டில் ஈடுபட்டால் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் வரும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். செல்வ வளத்தோடு, ஆனந்தமும் நிறைந்த காலமாக இருக்கும்.