சாந்திபுரம் பெளத்த விகாரையை சுத்தப்படுத்தும் மன்னார் இளைஞர்கள்!
மன்னாரில் சாந்திபுரத்தில் உள்ள பெளத்த விகாரை சுத்தப்படுத்தும் பணி அம்மாவட்டத்தின் மும்மதத்தை சேர்ந்த இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் சமூக ஒத்திசைவை பலப்படுத்தல் எனும் தொனிப்பொருளில், வாழ்வுக்கான தன்னார்வத் தொண்டர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், ரஹமா நிறுவனத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டுவரும் இளைஞர் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இது காணப்படுகின்றது.
நாளையதினம் (16-05-2022) பெளத்த மக்களால் வெசாக் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், திருமதி ரெஜினா இராமலிங்கம் தலைமையில், லியோ மற்றும் இளைஞர் கழகங்கள் அத்துடன் தன்னார்வ இளைஞர்கள் இணைந்து குறித்த சிரமதான பணியை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த சிரமதான பணியில் மும்மதத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கலந்து கொண்டு மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வை செயற்பாட்டு ரீதியாக வெளிப்படுத்தினர்.
குறித்த சிரமதான பணியில் அதிகளவான இஸ்லாம் இளைஞர் யுவதிகளும் கலந்து சுத்தம் செய்யும் பனியை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.