மனைவியுடன் சென்ற இளைஞன் கடத்தப்பட்டு படுகொலை
கொழும்பு- கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளூமெண்டல் ரயில் மார்க்க பகுதியில் மனைவியுடன் சென்ற நபர் கடத்தி செல்லப்பட்டு, கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
சம்பவத்தில் கொழும்பு மட்டக்குளி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே படுகொலை செய்யப்பட்டுளளார்.
தொலைபேசி அழைப்பொன்று வந்ததை அடுத்து , தனது மனைவியுடன் புளூமெண்டல் புகையிரத நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வந்த நபர்கள் சிலர் அவரை அங்கிருந்து கடத்தி சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.
கொலை சம்மபவத்திற்கான காரணம் மற்றும் கொலையாளிகள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.