கொழும்பில் மின் கம்ப உச்சிக்கு ஏறிய இளைஞனால் பரபரப்பு!
கொழும்பின் பொரளைப் பகுதியில் உள்ள மின் கம்பம் மீது இளைஞன் ஒருவன் ஏறிய சம்பவம், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
மின் கம்பத்தின் மீது ஏறியிருந்த அந்த இளைஞன், மின்சாரம் பாயும் ஆபத்தான நிலையில் இருந்தான்.
இந்நிலையில் இளைஞன் மின் கம்ப உச்சியில் ஏறியதை கண்ட அங்கிருந்தவர்கள் பதட்டத்திலும் அச்சத்தில் இருந்ததுட போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவம் பற்றி அறிந்ததும், பொலிஸார், தீயணைப்புப் படையினர் மற்றும் அவசர சேவைப் பிரிவினர் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தனர்.
அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட மீட்புப் படையினர் லாவகமாக இளைஞனை பிடித்து கிழே இறகியுள்ளனர்.
அதேவேளை மின் கப்ப உச்சிக்கு ஏறிய இளைஞன் மனநனலம் பாதிக்கபப்ட்டவர் எனவும் சமூக வலைத்தள பதிவுகள் கூறுகின்றன.