விடுதலைப்புலிகள் முக்கிய தளபதி சுவிட்சர்லாந்தில் மக்கள் மத்தியில் கண்ணீர் சிந்திய சோகம் (Video)
புலம்பெயர்ந்த நாட்டில் நிர்வாகம் செய்கிறார்கள் கட்டமைப்பு, அமைப்பு என வைத்திருப்போரிடம் விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீர்களின் விபரம் எதுவும் இல்லை ஆனால் என்னிடம் மாவட்ட ரீதியாக அனைத்து விபரங்களும் வைத்துள்ளேன், அதனை சாணக்கியன் நன்கு அறிவார் என விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண மூத்த தளபதி காந்தன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை மூத்த ஊடகவியலாளர் வேதனாயம் தலைமையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் மக்கள் சந்திப்பில் இக் கருத்து தெரிவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
எதுவும் செய்ய முடியாத நிலையில் நாம் இருக்கிறோம், இப்படியான ஒன்று கூடல்கள் இடம் பெறும் போது உள்ளுக்குள் உள்ள காழ்ப்புனர்ச்சிகளால் இப்படியான நிகழ்வுகளை வன்முறையாக மாற்ற முயற்சி செய்யாதீர்கள், நாங்கள் வன்முறையோடு வாழ்ந்து விட்டு வந்தவர்கள் எமக்கு எதையும் புதிதாக யாரும் கற்றுத் தர வேண்டாம்.
18வயதில் விடுதலைப்புலிகளில் இணைந்தவர்கள் நாங்கள், முன்னர் ஒரு பத்திரிகையாளர் நட்பாக இருந்தவர் அவருடன் அடிக்கடி கதைப்பது வழமை, உச்சக்கட்டமாக ஏற்பட்ட கருத்து முறன் பாட்டில் எங்களின் ஊடகப் பலத்துக்கு காந்தன் ஒரு தூசு என கூறியமை தாங்க முடியவில்லை என கண்ணீர் விட்டு அழுதார்.
நான் இப்போது மதிக்கும் ஒருவரே சம்பந்தன் ஐயா, அவர் மூலமே சாணக்கியனை கட்சிக்குள் நுளைத்தேன், என்று விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண மூத்த தளபதி காந்தன் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மாவைக்கு எல்லாம் ஒரே கதைதான் என இரு மாதத்துக்கு முன் மாவைக்கு அதை தொலைபேசியில் தெளிவாக குறிப்பிட்டேன் என மேலும் தெரிவித்த மூத்த தளபதி காந்தன் அவர்களிடம் நிகழ்வில் கலந்து கொண்ட பலர் யார் உங்களை இப்படி அழுவதற்கு காரணம் என வினவி போது, தாங்களே கூட்டமைப்பைப் பிரசவித்தோம் என்று கூறும் மூத்த பத்திரிகையாளர்களே காரணம் எனக் கூறியதாக நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் உணர்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
02.மங்களேஸ்வரி நீக்கம் தொடர்பில் திடுக்கிடும் இரகசியம் (Video)