சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 16க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இதுவரை பலி
கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் 16க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை 160க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொரோனா தொற்றுக்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைத்தியசாலையில் தினமும் 25க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்படுகையில் தற்போது நான்கு சிறுவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுகின்றனர் என மேற்படி வைத்தியசாலையின் மருத்துவர் ஜீ. விஜேசூரிய தெரிவித்தார்.
மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை என்று குறிப்பிட்ட அவர், அனுமதிக்கப்படும் சிறுவர்களுக்கு படுக்கைகள் வழங்கப்படு வதையும் சிறுவர்கள் தரையில் விடப்படாதிருப்பதையும் உறுதி செய்ய வைத்தியசாலை ஊழியர்களுக்கு விஷேட அறிவுறுத் தல்கள் வழங்கப்பட்டுள்ளன என மேலும் தெரிவித்தார்.