ஆணொருவருக்கு நேர்ந்த துயரம்... பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
கொத்மலை – வேவண்டன் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஆணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (21-09-20222) நுவரெலியா மாவட்டம் கொத்தமலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
நேற்றைய தினம் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு ஆண்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்.
இதன்போது, குறித்த இருவரும் கம்பளை போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டனர்.
அதில் ஒருவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பலியானவர் 60 வயது மதிக்கத்தக்க கொத்மலை வௌண்டன் பிரிவைச் சேர்ந்தவராவார்.
இதன்போது, காயமடைந்த 23 வயதுடையவர் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.