கிளிநொச்சியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் யாழில் மீட்பு!
கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் களவாடப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏ9 வீதியில் கடந்த மாதம் 27.11.2023 அன்று களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்களை தனித்தனியாக பிரித்து மோட்டார் சைக்கிளில் சொக்கச்சோர் ஒன்றை விற்பனை செய்ய முற்பட்ட வேளையில் உதிரி பாகங்களை விற்பனையில் ஈடுபட்டவர் மீது வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் நிமித்தமாக அவர் 14.12.2023 அன்று கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டு அவற்றை தனித்தனியாக உதிரி பாகங்களை பிரித்து விற்பனை செய்வதற்காக யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைக்காக வட்டுக்கோட்டை பொலிஸார் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களுடன் சந்தேக நபரை கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.