இரு தடுப்பூசைகளையும் பெற்றுக்கொண்ட அரசியல் முக்கியஸ்தருக்கு கொரோனா
நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்றைய தினம் சந்திக்க சென்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு நாடாளுமன்ற உறுப்பினரிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் முடிவுகள் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிபப்பிடத்தக்கது.