கடன் தொல்லையால் தமிழகத்திற்கு தப்பி ஓடிய இலங்கை குடும்பம்
இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு தஞ்சம்கோரி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி , கம்பளை பகுதியைச் சேர்ந்த முகம்மது கியாஸ் (43), மனைவி பாத்திமா பர்ஹானா (34) இவர்களின் குழந்தைகள் முகம்மது யஹ்யா (12), அலிஷா (4), அமிரா (4) ஆகிய 5 பேர் தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி
தகவலறிந்த மெரைன் போலீஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்த 5 பேரையும் மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில், முகம்மது கியாஸ் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அங்கு பலரிடம் கடன் பெற்று திருப்பி கொடுக்க முடியாததால் வாழ வழியின்றி தமிழகத்துக்கு குடும்பத்தோடு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு பின்னர், அவர்கள் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.