3 பெண்களுடன் தொடர்பு; பில்கேட்ஸை மிரட்டிய எப்ஸ்டீன்!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் அளித்த ரகசிய வாக்குமூலத்தில், மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தனது தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களை பயன்படுத்தி தன்னை மிரட்ட முயன்றதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வை குழுவிடம் பேசிய பில் கேட்ஸ், தனக்கு மூன்று பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அதில் இருவரை பற்றி எப்ஸ்டீனுக்கு தெரியும் என்றும் ஒப்புக்கொண்டார்.

எப்ஸ்டீனின் குற்றங்களுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை
ரஷ்யாவை சேர்ந்த பிரிட்ஜ் வீராங்கனை மிலா ஆண்டோனோவா மற்றும் அணு இயற்பியலாளர் கரிமா நிக்மதுலினா ஆகியோருடனான தனது உறவுகள் எப்ஸ்டீனுக்கு தெரிந்திருந்ததாக குறிப்பிட்டார்.
இந்த தகவல்களையும் சில பொய்களையும் கலந்து, எப்ஸ்டீன் தன்னை மீண்டும் தன்னுடன் இணைந்து செயல்படுமாறு வற்புறுத்தவும், மிரட்டவும் திட்டமிட்டிருக்கலாம் என்று கேட்ஸ் கூறினார்.
எப்ஸ்டீன் தன்னை நேரடியாக மிரட்டவில்லை என்றாலும், அவரது மின்னஞ்சல் வரைவுகளை பார்க்கும்போது அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருந்ததாக கேட்ஸ் சுட்டிக்காட்டினார்.
மேலும், எப்ஸ்டீனின் குற்றங்களுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தொண்டு நிறுவன நிதியுதவி திட்டங்களுக்காக அவரை 12 முதல் 14 முறை சந்தித்தது ஒரு தவறான முடிவு என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.