இளம் பொலிஸ் அதிகாரி உட்பட 7 பேர் அதிரடி கைது! வெளியான அதிர்ச்சி காரணம்
நுரைச்சோலை, ஆலங்குடா பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றிலிருந்து போதைப்பொருளுடன் இளம் பொலிஸ் அதிகாரி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் இளம் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆலங்குடா பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இளைஞர்கள் குழுவொன்று போதைப்பொருள் பாவிப்பதாக நுரைச்சோலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை சுற்றிவளைத்த நுரைச்சோலை பொலிஸார், அங்கு தங்கியிருந்த 7 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 7 பேரில் ஆறு பேர் நுரைச்சோலை மற்றும் ஆலங்குடா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் ஐஸ் போதைப் பொருள் பாவித்தமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இளம் பொலிஸ் அதிகாரியை சோதனையிட்ட போது 1 கிராம் 200 மில்லி கிராம் கஞ்சா இருந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
நுரைச்சோலை பொலிஸ் நிலையை பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எல்.பஷ்பநாதன் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.