கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் வெளியான பரபரப்பு சிசிரிவி காட்சி!
கஹதுடுவ - ரிலாவல பகுதியில் மோட்டார் சைக்கிளும் காரொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்லது.
இந்த விபத்து சம்பவம் இன்று (23-02-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த நபரொருவர் தற்போது வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கஹதுடுவ பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஹொரணை-கொழும்பு வீதியில் மத்தேகொட நோக்கி திரும்பும் போது கொழும்பில் இருந்து வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் குறித்த விபத்து மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மற்றும் கார் சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த விபத்து சம்பவம் அருகில் இருந்த சிசிரிவி கமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.