கண்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்
கண்டி கடுகன்னாவை பகுதியில் கட்டிடம் ஒன்றின் மின் தூக்கி உடைந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் கடுகன்னாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிலிமத்தலாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இவ்விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் பலன பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, பொலித்தீன் பைகள் மற்றும் அரிசி மூட்டைகள் தயாரிக்கும் மூன்று மாடிகளை கொண்ட கட்டிடத்தின் மின்தூக்கியே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த மற்றொரு பெண் சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.