நாட்டில் இனவாத,மதவாத பிசாசுகள் ; அமைச்சர் கடும் சினம்
மக்கள் மத்தியில் இனவாத மற்றும் மதவாத பிரச்சினைகளை கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாமரை கோபுரத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்
திருகோணமலை கடற்கரை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட பெளத்த வணக்கஸ்தலத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை நீண்ட நெர போராட்டத்தின் பின்னர் அங்கிருந்து அகற்றப்பட்டது.
நாட்டில் சில இனவாத,மதவாத பிசாசுகள் உள்ளனர். அவர்கள் தான் இதனை செய்கின்றனர். மக்கள் மத்தியில் இனவாத மற்றும் மதவாத பிரச்சினைகளை கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
மேலும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.