திருமணத்திற்கு ஒரு மணி நேரம் முன் நிகழ்ந்த கொடூரம்; மணமகளை அடித்தே கொன்ற மணமகன்; உறவினர்கள் அதிர்ச்சி
திருமண நிகழ்வொன்றில் திருமணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மணமகன் மணமகளை அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,
குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியை சேர்ந்த சாஜன் பரையா என்ற இளைஞனும், சோனி ரத்தோட் என்ற பெண்ணும் திருமண பந்தத்தில் இணைய காத்திருந்தனர்.

திருமண செலவுகள் மற்றும் பணம் குறித்து வாக்குவாதம்
திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், திருமண முகூர்த்தத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு, திருமண தம்பதிகள் இருவருக்கும் வாய்தர்க்கம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருமண சேலை பிடிக்காதது தொடர்பாக வெடித்த வாக்குவாதம், திருமண செலவுகள் மற்றும் பணம் குறித்து நீடித்தது. அதனால் ஆத்திரமடைந்த மணமகன், மணமகளை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் மணமகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மணமகன் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மணமகள் உடலத்தை கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தப்பி சென்ற மணமகனை காவல்துறை சிறப்பு குழு அமைத்து தேடி வருவதாக கூறப்படும் நிலையில், திருமன கனவுடன் காத்திருந்த யுவத்திக்கு நேர்ந்த சம்பவம் உறவிரன்ர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தயும் ஏற்படுத்தியுள்ளது.