துபாயில் வேலை: 50 லட்சத்திற்கு மேல் பண மோசடி.. சிக்கிய சந்தேக நபர்!
துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த 28ஆம் திகதி ருவன்வெல்ல பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் ருவல்வெல்ல நகரில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றை நடாத்தி வந்த நிலையில் குறித்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 50 இலட்சத்துக்கும் அதிகமான ரூபாவை சந்தேக நபர் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் இதற்கு முன்னர் மினுவாங்கொடை பிரதேசத்தில் வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றை நடாத்தி பண மோசடி செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பணியகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபரை ருவான்வெல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.