யாழில் பரபரப்பு சம்பவம்: தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்!
Sri Lanka Police
Jaffna
By Shankar
யாழில் உள்ள பகுதி ஒன்றில் தனிமையில் இருந்த முதியவர் ஒருவர் இன்று காலை அவரது வீட்டிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணி, நாவற்காட்டு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இதன்போது, வரணி நாவற்காட்டு பகுதியைச் சேர்ந்த 65 வயதான வ.துரைராசா என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முதியவரது சடலம் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US