யாழில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகில் காணப்படும் அவல நிலை!
வட மாகாணத்தில் அதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் சமீப காலமாக தீவிரமடைந்து வருவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியல் சுமார் 3100 பேருக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில வாரங்களில் இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்திருந்தார்.
இவ்வாறான ஒரு நிலையில், செங்கற்படை மஹாதேவா பிள்ளையார் ஆலய அருகில் உள்ள காணியில் பெருமளவான இளநீர் கோம்பைகள் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு டெங்கு நுளம்பு பரவும் அபாயம் காணப்படுகின்றது.
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்டதும், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஏழாம் வட்டாரத்தில் ஜெ/179 கிராமசேவகர் காணப்படும் இந்த காணியில் ஆலய பூசைகளின்போது பயன்படுத்தப்பட்ட இளநீர் கோம்பைகள் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.