இலங்கையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் புகைப்படம் வெளியானது!
அம்பலாங்கொடை மற்றும் பிடிகல பிரதேசங்களில் நேற்று முன்தினம் இரவு (11-03-2024) இடம்பெற்ற இரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
அம்பலாங்கொட, கலகொட, வெல வீதியில் அமைந்துள்ள கடையொன்றுக்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில், ஹலம்ப உதேஷ் மதுஷங்க என்ற பொடி மெந்திஸ் என்ற நபரும் மற்றும் தடல்லகே சித்தும் அங்ஜன என்ற சுது இருவர் உயிரிழந்துள்ளனர்.
லொகு சத்துர என்ற சத்துர மதுஷங்க, பத்தினி வசம் அகில மற்றும் சங்கமகே சம்பிக்க துஷார ஆகியோர் காயமடைந்த தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, பிடிகல, குருவல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றின் முன்பாக நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒரு பெண் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சசித் மதுஷங்க என்ற 31 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 26 வயதான கவிஷ்க அஞ்சனவும் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.