ரஞ்சனின் பொதுமன்னிப்பு தொடர்பில் வெளியான தகவல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுவதற்கு முன்னர், நீதிமன்றம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து சத்தியக்கடதாசி ஒன்றை சமர்ப்பிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால சிறைத்தண்டனை அனுபவித்து நல்ல செயல்களைச் செய்து சமூகத்திற்குப் பங்களிக்கக் கூடியவர் என்பதன் அடிப்படையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு நியாயமானது என அரசாங்கம் நம்புவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் இரண்டு மூன்று தினங்களுக்குள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சத்திய கடதாசி சமர்ப்பித்ததுடன் எதிர்வரும் வாரத்தில் அவரை விடுதலை செய்வதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி கையொப்பமிட உள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் வாரத்தின் ஆரம்பத்தில் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.