தூங்காமல் அழுதது குளிர்சாதன பெட்டியில் வைத்தேன்... பல வருடம் கழித்து பிறந்த குழந்தைக்கு தாய் செய்த சம்பவம்
பிறந்த பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே குளிர்சாதன பெட்டியில் வைத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் - உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தின் ஜப்பார் காலனி சேர்ந்த திருமணமாகி ஐந்து ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த ஆர்த்தி என்பவர் கர்ப்பம் தரித்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
மூட நம்பிக்கை
இந்த நிலையில் இரவு வீட்டில் குழந்தையுடன் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது குழந்தை திடீரென குழந்தை அழுதுள்ளது. அப்போது ஆர்த்தி உடனே குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில், குளிர் மற்றும் வலித்தாங்க முடியாமல் கதறிய குழந்தை கத்தி அழுதுள்ளது.
பின்னர் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு சமையலறைக்கு ஓடி வந்த அவரது மாமியார் , சமயலறை முழுவதும் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்த போது அதில் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து குழந்தையை குளிர்சாதன பெட்டியில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 15 நாள் குழந்தையை அழைத்து சென்றனர். அங்கு தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்திய போது, குழந்தை தொடர்ந்து அழுதுக் கொண்டு இருந்தது. நீண்ட நேரமாகியும் தூங்கவில்லை, அதனால் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தேன்" என்று பதிலளித்தார்.
இதனை கேட்டு பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்த போது, பேய் பிடித்து இருப்பதாக கருதி கோவிலுக்கு அழைத்து சென்று மந்திரம் போட்டதாக கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மன நல மருத்துவரால் அவருக்கு பிரசவத்திற்குப் பிந்தைய மனநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண் இப்போது ஆலோசனை மற்றும் சிகிச்சையைப் பெற்று வருகிறார்.