இலங்கை தொடர்பில் அமெரிக்க தூதுவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இலங்கை மற்றும் அமெரிக்க வர்த்தகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை எவ்வாறு மேலும் அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பில் அமெரிக்கா - இலங்கை வர்த்தக சபையுடன் கலந்துரையாடியதாக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது அமெரிக்க - இலங்கை இருதரப்பு வர்த்தகத்தின் மூலம் 180,000 இலங்கைத் தொழிலாளர்கள் ஆதரவு பெறுவதாகவும் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் பில்லியன் கணக்கான பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு நிதியளித்தல், விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரங்கள் வழங்குதல், பொது நிதி மேலாண்மை பயிற்சி மற்றும் கல்வி பரிமாற்றங்கள் போன்ற திட்டங்களுக்கு அமெரிக்கா இரட்டிப்பு ஆதரவை வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை மேலும் ஆதரிக்க முடியும் என்றும் ஜூலி சாங் கூறுகிறார்.