கிளிநொச்சியில் சட்டவிரோதமான துப்பாக்கிகளை வைத்திருந்தவர் கைது
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறுகல்லாறு பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு இடியன் துப்பாக்கிகள் , மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும் கட்டுத் துவக்கு குழாய்கள் 03, கட்டுத் துவக்குக்கு பயன்படுத்தப்படும் கம்பி மற்றும் ஈயக்குண்டுகள் 12 , யானை வெடி 3 ,வெடிமருந்து என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் (14.02.2024 ) தர்மபுரம் பொலிஸார் சுற்றிவளைத்து குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளைய தினம் (15.02.2024) கிளிநொச்சி நீதிமன்றம் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.